BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 14 November 2014

உணவுப் பாதுகாப்பு விவகாரம் : இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்



உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.இதையடுத்து, இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களாக நிலவி வந்த முட்டுக்கட்டை நீங்கும் என்று தெரிகிறது.இதன்படி, உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் மானியம் 10 சதத்துக்கு மிகக்கூடாது என்ற உலக வர்த்தக அமைப்பின் வரம்புக்கு அதிகமாக இந்தியாவில் உணவு மானியம் வழங்கப்பட்டாலும், அதற்கு உலக வர்த்தக அமைப்பில் உள்ள நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்க இயலாது.வரும் சனிக்கிழமை, ஜி-20 நாடுகளுக்கிடையேயான இரு நாள் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies