BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

அண்மை செய்திகள்

முக்கிய செய்திகள்

சினிமா

உடல்நலம்

Sunday 12 May 2024

ஸ்டார் Review: கனவுகளைத் துரத்தும் போராட்டமும், சில தாக்கங்களும்!


சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’. சினிமாவில் நாயகனாகும் ஆசையை சிறுவயதிலிருந்தே பற்றிப்பிடித்திருக்கிறார் கலையரசன் (கவின்). இதே போன்றதொரு கனவைக் கண்டு, அதை எட்ட முடியாமல் வாழ்வில் தோல்வியுற்று, கிடைத்த வேலையை தொடர்பவர் அவரது தந்தை பாண்டியன் (லால்). திரையுலகில் அடியெடுத்து வைக்க, பணமும், பொறுமையும் தேவை என்பதால் தாய்க்கு அதில் ஈடுபாடில்லை.

ஈடேறாமல் போன தன்னுடைய லட்சியம், மகனுக்காவது அகப்பட வேண்டும் என கலையரசனை ஹீரோவாக்க உறுதுணையாக நிற்கிறார் தந்தை பாண்டியன். காலம் ‘விபத்து’ என்றொரு வலையை விரித்து நாயகனாக துடிக்கும் கலையரசனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் ‘ஸ்டார்’ ஆனாரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.

லட்சியத்தை மட்டும் மூலதனமாக கொண்ட ஒருவனின் வாழ்க்கையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களை கமர்ஷியல் சினிமாத் தன்மையுடன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் இளன். காதல், சண்டை, காலேஜ் கலாட்டா என ஜாலியாக தொடங்கும் படம் மெல்ல நகர்ந்து மையக்கதைக்கு வரும்போது சூடுபிடிக்கிறது. மகனின் கனவுகளுக்கு சிறகளிக்கும் தந்தை, வாய்ப்புக்காக கவின் மன்றாடும் இடங்கள், ஒரு போன் காலுக்காக காத்திருப்பது, சினிமாவால் தூக்கி ஏறியப்பட்டவர்களின் வாழ்வு, எதிர்பாராத விபத்து, உடைந்து போவது, பிடிக்காத வேலை, புறக்கணிப்பு, இடையில் யவுன் கொடுத்த சர்ப்ரைஸ் என அதன்போக்கில் நகர்கிறது படம்.

“சுயநலமில்லாதது கலை; அதனால் மாற்றத்தை நிகழ்த்த முடியும்”, “உருவாக்கறவன விட , ரசிக்குறவனுக்கு தான் அது சொந்தம்”, “உன் கண்ணிவெடிகள் யாவும்” என தொடங்கும் வசனம் சிறப்பாக எழுத்தப்பட்டுள்ளது.

“நடிப்பால் எதை வேண்டுமானாலும் மறக்கடிக்கலாம்” என்ற வசனத்தை இறுதியில் நிரூபித்து கனெக்ட் செய்த விதம், வழக்கத்திலிருந்து விலகிய க்ளைமாக்ஸ் முயற்சி பாராட்டத்தக்கது. படையப்பா, குஷி பட ரெஃபரன்ஸ், பெப்சி டீசர்ட், சுற்றும் பெல்ட், வின்டேஜ் நோக்கியா மொபைல், பைக், என 90, 2000-ம் காலட்ட நினைவுகளை கிளறியது ரசிக்க வைத்தது.

அதேநேரம் முழுமையாக ஒரு கலைஞனின் வாழ்க்கையை அழுத்தத்துடன் படம் பதிவு செய்கிறதா என்றால் அது கேள்வியே. எதற்காக இரண்டு நாயகிகள்? அவர்களுக்கான தேவை என்ன? மும்பை பயணம் நாயகன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதுடன், இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் நெளிய வைப்பதை தவிர்க்க முடியவில்லை.

கண்ணாடியைப் பார்த்து உடைந்து அழும் காட்சியாகட்டும், சிங்கிள் ஷாட்டில் உணர்ச்சிப்பொங்க பேசுவது, பதற்றத்தையும் பயத்தையும் சுமந்து நடித்தது, ரொமான்ஸ், பெண் வேடம் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார் கவின். அவரது கரியரில் முக்கியமான படமான இதனை முடிந்த அளவுக்கு தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருக்கிறார். தந்தையின் வலியை உணர்வுகளில் உருக்கியிருக்கிறால் லால். அட்டகாசம்!

கவினின் தாயாக வரும் கீதா கைலாசம் ஓவர் ஆக்டிங் என்ற எண்ணத்தை கொடுக்காமலில்லை. நாயகி ப்ரீத்தி முகுந்தன் சொன்னதை செய்திருக்கிறார். அதிதி போகன்கர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், லிப் சிங் பிரச்சினை எட்டிப் பார்க்கவே செய்கிறது. இவர்களைத் தவிர்த்து மாறன், காதல் சுகுமார், நிவேதிதா, பாண்டியன் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் மற்றொரு ஹீரோ யுவன். எழுத்து சோர்வடையும் காட்சிகளில் தன் இசையால் அதனை மெருக்கேற்றியும், குரலால் காட்சிகளில் ஈரத்தை தடவியும் ஈர்க்கிறார். அதிலும் அந்த சர்ப்ரைஸ் முயற்சி பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி. அவரின் பாடல்கள் கதையோட்டத்துடன் கரைகின்றன. எழில் அரசின் கேமரா இறுதிக்காட்சியில் அதகளம் செய்கிறது. அதிலும் சில காட்சிகளில் ஃப்ரேம்கள் கவனிக்க வைக்கின்றன. ப்ரதீப் ராகவ்வின் ‘ஷார்ப்’ கட்ஸ் ஓரளவு கைகொடுக்கிறது.

‘The universe always falls in love with a stubborn heart’ என்ற வசனம் மூலம் கனவுகளை நோக்கி துவளாமல் போராடத் தூண்டும் படம் சர்ப்ரைஸ், சில ஐடியாக்கள், சில எமோஷன்களாக கவர்கிறது. ஒட்டுமொத்தமாக ஜொலிக்கிறதா என்றால் அது கேள்வியே!


Sunday 10 September 2023

அப்பாவுக்கு சினிமா தான் எல்லாம்.? மறைந்த மாரிமுத்துவின் மகன் கொடுத்த வியக்க வைக்கும் வீடியோ பதிவு உள்ளே..!!😮😮👇👇



கடந்த, சில ஆண்டுகளாக திரைப்படங்கள் அடுத்தடுத்து உயிரிலிருந்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் சக கலைஞர் மத்தியிலும் பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது. அப்படி இருக்கும் நிலையில் சற்று முன் பிரபல சின்னத்திரை நடிகரும் வெள்ளித்திரை நடிகருமான மாரிமுத்து என்பவர் உயிரிழந்துள்ளார்.

 

இவர் திரைப்படத்தில் இயக்குனராக இருந்த பொழுதும் நடிகராக இருந்த பொழுதும் பெரியளவு ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. ஆனால், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட எதிர்நீச்சல் என்ற

 

சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக அந்த சீரியலில் இவருடைய வசனம் ”ஏமா ஏய்” என்று சொல்லும் வசனத்திற்காகவே ஏராளமானவர்கள் இந்த சீரியலை பார்த்து வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், எதிர்நீச்சல் சீரியல் இவருடைய கதாபாத்திரம் மற்றும் நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வந்துள்ளது.

 

இப்படி ஒரு திடீரென்று மரணம் அடைந்தது பெரியளவு ரசிகர்கள் மட்டும் நடிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய சொந்த ஊரான தேனிக்கு

 

இன்று அவருடைய உடலை கொண்டு சென்று தகனம் செய்துள்ளார்கள் அதனைத் தொடர்ந்து அவரது மகன் முதன்முறையாக இணையதளத்தில் தனது தந்தை பற்றி பல உண்மைகளை பேசியுள்ள அந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

 

 


Tuesday 22 August 2023

"என் மார்பகம் இதனால தான் பெருசாகிடுச்சு.." - வெளிப்படையாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

 


டிக்டாப், யூட்யூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அப்படி இப்படி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா.

இவருடைய பெரிய சைஸ் முன்னழகு தான் இவருடைய அடையாளம் என்று கூறலாம். அந்த அளவுக்கு பெரிதாக இருக்கும் இவருடைய முன்னழகு எப்படி இவ்வளவு பெரிதானது.. என்று இலக்கியாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பல்வேறு சர்ச்சைகள் சிக்கி இருக்கும் இவர் அவ்வப்போது யூடியூப் பேட்டிகளில் கலந்து கொண்டு விவகாரமான கேள்விகளுக்கு அசால்டாக பதில் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Monday 21 August 2023

ஆரம்ப காலத்தில் நமீதா எவ்ளோ ஸ்லிம்மா இருந்தாரா? நமீதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ஷாக்கான ரசிகர்கள்…

 

நமீதா அழகுப் போட்டிப் போட்டியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 17 வயதில் 1998 இல் மிஸ் சூரத் பட்டத்தை வென்றார். பின்னர் அவர் 2001 மிஸ் இந்தியா போட்டியில் போட்டியிட்டு மூன்றாவது இரண்டாம் இடத்தைப் பிடித்தார், செலினா ஜெட்லி மிஸ் பட்டத்தை வென்றார். இந்தியா.

Monday 14 August 2023

சென்சாரில் நீக்கப்பட்ட ஜெயிலரின் கிளைமேக்ஸ் காட்சி.. அது மட்டும் இருந்தா பயங்கரமா இருந்திருக்கும்… எடிட்டர் நிர்மல் பகிர்ந்த தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். 


இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஜெய்லர் திரைப்படம் இதுவரை உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்பட எடிட்டர் நிர்மல் அளித்துள்ள பேட்டியில் கிளைமேக்ஸ் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். தற்போது படத்தில் இருக்கும் கிளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு ஒரு மாசான சீன் ஒன்று இருந்தது. அதை சென்சாரில் நீக்கி விட்டார்கள். அது மட்டும் இருந்திருந்தால் பத்து நொடிகள் வரும் அந்த காட்சி இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Saturday 12 August 2023

ரம்யா கிருஷ்ணனின் கணவர் மற்றும் அப்பா, அம்மா என்று முதன் முறையாக வெளியாக குடும்ப புகைப்படம்…

தற்போது வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ரம்யா கிருஷ்ணன்.ராஜ்யசபா சோ ராமசுவாமி, ஒரு நகைச்சுவை நடிகர், மற்றும் தமிழியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ரம்யா கிருஷ்ணனின் மாமா ஆவார்..அவர் அடிக்கடி மேடையில் நடித்துள்ளார் மற்றும் குச்சிப்புடி, மேற்கத்திய மற்றும் பரதநாட்டியம் நடன பாணிகளில் அடிப்படை பயிற்சி பெற்றுள்ளார்.தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தார், திருமணத்திற்கு பின்னர் ஒரு மகன் பிறந்தார்,



தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்து வந்தார் அந்த அவகையில் தங்கம், வம்சம், ராஜகுமாரி ஆகிய படங்களில் தொடர்ந்து சன் டிவியில் பணியாற்றி வந்தார். பின்னர், ஸ்வீட்டி நன்னா ஜோடி மற்றும் மாணிக்யா போன்ற கன்னட படங்களிலும்,

ரங்கா தி டோங்கா மற்றும் யமுதிகி மொகுடு போன்ற தெலுங்கு படங்களிலும் கிருஷ்ணன் துணைப் பாத்திரங்களில் நடித்தார். ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி சரித்திரத்தில், கிருஷ்ணர் சுமனுடன் பார்வதி தேவியாக நடித்தார்.பாகுபலியின் இரண்டு தொடர்ச்சிகளிலும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு உலக ஊடகங்களில் இருந்து அவரது பாராட்டைப் பெற்றது.

அவர் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் அதிக தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இயக்கப் படங்களில் குறைவாகவும் நடிக்கத் தொடங்கினார். வம்சம், சக்தி, மற்றும் பிக் பாஸ் ஜோடிகளில் நடுவராக பணியாற்றுவது ஆகியவை குறிப்பிடத்தக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

நவம்பர் 2021 இல் ரம்யாகிருஷ்ணன் பிக் பாஸ் தமிழின் சீசன் 5 ஐ தொகுத்து வழங்கினார், அவ்வாறு செய்த முதல் மற்றும் ஒரே பெண் என்ற வரலாற்றை உருவாக்கினார்.இப்போது சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்து இருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Friday 11 August 2023

டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.. பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்

 Gossip News: ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நடிகை இவர். இவருடன் நடித்த பல நடிகர்களும், இவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த நடிகையோ சினிமாவும், பணமும் தான் முக்கியம் என கராராக காதலில் விழாமல், பல வெற்றி படங்களை கொடுத்து முன்னேறிக் கொண்டிருந்தார்.




எப்பேர்பட்ட அழகியாக இருந்தாலும் இந்த நடிகரிடம் சிக்கி தான் ஆக வேண்டும் என்பது போல் தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹீரோவிடம் நடிகை வசமாக சிக்கி இருக்கிறார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் காதலுக்கு எதுவும் முக்கியம் இல்லை என்பது போல் பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.

சினிமாவே குறிக்கோள் என இருந்த நடிகை, இந்த பிளேபாயின் வலையில் வசமாக சிக்கிக் கொண்டு காதல் மயக்கத்திலிருந்து இருக்கிறார். நடிகரும் பல நாட்களாக நடிகையை வேட்டையாடி வந்திருக்கிறார். இந்த டான்ஸ் நடிகை எப்படியாவது இந்த முன்னணி ஹீரோவை திருமணம் செய்து கொண்டு ஆகி விட வேண்டும் என பலவாறும் திட்டம் போட்டுள்ளார்.

ஆனால் இந்த ஹீரோவோ சினிமாவில் பல நடிகைகளுக்கு அல்வா கொடுத்தவர். நடிகையை தன் ஆசைக்காக உபயோகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், இருவரும் காதலில் இருந்த சமயத்தில் நடிகையின் சம்பளத்தை முதற்கொண்டு இவர் தான் வாங்கி வைத்திருப்பாராம். நடிகையும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

இப்படியே இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்ததால் நடிகைக்கு மொத்தமாக மார்க்கெட் சரிந்து விட்டது. அதே நேரத்தில் நடிகரின் சுயரூபமும் கொஞ்சம் கொஞ்சமாக நடிகைக்கு தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என நேரம் பார்த்து நடிகரை கழட்டி விட்டு விட்டு, இழந்த மார்க்கெட்டை மீண்டும் தன்னுடைய முயற்சியால் பிடித்திருக்கிறார்.

Thursday 10 August 2023

ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்

 ஜெயிலர் படத்தைப் பார்த்த பின் ப்ளூ சட்டை மாறனின் முதல் பதிவு.



Blue Sattai Maran: ஜெயிலர் படத்தை பற்றிய அனல் பறக்கும் விவாதங்கள் தான் தற்போது இணையத்தை சூழ்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கி இருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்கள் தன்னை மிரட்டுவதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார். ஆனாலும் விடாது கருப்பு என்பது போல தொடர்ந்து ரஜினியை சீண்டி வருகிறார் ப்ளூ சட்டை. இந்நிலையில் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் சினிமா விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தை பற்றி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருந்தது. அதன்படி ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் நம்ம பக்கம் தான் மகிழ்ச்சி என்று கமெண்டை பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது ரஜினியை நன்றாக நெல்சன் வச்சி செய்து விட்டார் என்பதை தான் குறிப்பிடும் விதமாக ப்ளூ சட்டை இவ்வாறு மறைமுகமாக பதிவிட்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு நெல்சனை ப்ளூ சட்டை மாறன் வம்புக்கு இழுத்து இருக்கிறார். மேலும் தனது யூடியூப் சேனலில் விரைவில் ஜெயிலர் படத்தை பற்றி மோசமான விமர்சனத்தை தான் ப்ளூ சட்டை கொடுக்க இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயிலர் படத்தால் இப்போது ப்ளூ சட்டை மாறன் நெல்சனை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் விஜய்யின் பக்கம் தான் நெல்சன் என விஜய் ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். ஆனால் பொதுவாக ஜெயிலர் படத்தின் முதல் பாதி மிகவும் பிரமாதமாக இருப்பதாகத்தான் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

மேலும் இரண்டாம் பாதியில் சில தொய்வு இருந்தாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ப்ளூ சட்டை மாறன் ரஜினிக்கு எதிராக உள்ளவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஜெயிலர் படத்தை மோசமாக விமர்சித்து சதி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது.



மீண்டும் சொதப்பினாரா நெல்சன்? ஜெயிலர் படத்தின் திரை விமர்சனம்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதனால் தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்ய ரஜினி நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டார். கடைசியாக நெல்சன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் ஆர். நிர்மல் ஆகியோர் கையாண்டுள்ளனர்.

காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரஜினி தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மகன் வசந்த ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறார். வசந்த் ரவி காவல்துறையில் உதவி கமிஷனர் ஆக பணிபுரிகிறார். சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகனை அந்த கும்பல் கொலை செய்து விடுகிறது, தன் மகனை தான் நேர்மையாக வளர்த்ததால்தான் தன் மகன் இறந்து விட்டதாக எண்ணி ரஜினி அந்த கும்பலை பலி வாங்குகிறார், இறுதியில் என்ன ஆனது என்பதே ஜெயிலர் படத்தின் கதை.

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ரஜினி ஒரு சட்டிலான பர்பாமன்ஸை கொடுத்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் சரி யோகி பாபு உடன் செய்யும் காமெடி காட்சிகளிலும் சரி முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படம் முழுக்கவே ரஜினிக்கு பில்டப் மற்றும் மாஸ் காட்சிகள் நிறைந்துள்ளது l, அதில் கணக்கச்சிதமாக உள்ளார் ரஜினி. ரஜினிக்கு அடுத்தபடியாக வில்லனாக நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர்.


தமன்னா, ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், மோகன்லால் ஆடியோ சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். அவர்கள் வரும் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தனது முந்தைய படமான பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால் ரசிகர்களால் மோசமான விமர்சனத்திற்கு உள்ளான நெல்சன் இந்த படத்தில் கம்பக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்துள்ளார் என்பது கண்கூடாக தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் என்ன விரும்புவார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டு ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார்.

நெல்சனின் முந்தைய படங்களை போல ஜெயிலர் படத்தில் காமெடி காட்சிகள் அவ்வளவாக ஒர்க் ஆகவில்லை. ஆனாலும் அதனை மறக்கடிக்கும் விதமாக ஆக்சன் காட்சிகள் படம் முழுக்கவே நிறைந்துள்ளது. ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் அடுத்தபடியாக படத்தை தாங்குவது அனிருத்தின் பின்னணி இசை தான். சொல்லப்போனால் அனிருத் இல்லை என்றால் ஜெயிலர் படமே ஒரு படி கீழே தான் இருந்திருக்கும், அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொட்டியுள்ளார்.  


மற்ற படங்களை விட ரஜினி இந்த படத்தில் ஒரு படி பின்னால் இருந்துதான் நடித்துள்ளார், காரணம் அவரை சுற்றியுள்ள கதாபாத்திரங்களை அவருக்கு உதவி செய்கிறது. கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் ஜெய்லர் படத்தில் ஆங்காகே கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. படத்தில் வரும் முக்கியமான விஷயம் நன்றாகவே இருந்தது, மொத்தத்தில் ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies