முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டிய நிலையில் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 456 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.