BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 19 October 2014

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!


சொத்து குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அதில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது. இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

இதனையடுத்த நேற்று மாலை ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.  இந்நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயல்லிதாவுக்கு தீபாவளி  வாழ்த்து கூறினார். ஜெயலலிதா கார்டனுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் உடல்நலத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்றார். இந்த வாழ்த்து செய்தியை அவர் கடிதம் மூலம் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies