BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 19 October 2014

தமிழக முதல்வர் யார் என்ற சந்தேகத்தில் தமிழக மக்கள் ??






சொத்து குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. 2 முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அதில் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது.

இது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்த நேற்று மாலை ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் வந்த இடம் எல்லாம் மக்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர். இதனை ஜெயா டிவியில் நேரலையாக காண்பித்தார்கள். அதில் வார்த்தைக்கு வார்த்தை மக்களின் முதல்வர் மக்களின் முதல்வர் என ஜெயலலிதாவை கூறினார்கள்.

ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்ததால் தான் பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று கொண்டார். ஆனால் யாரும் அவரை முதல்வராக மதிப்பது இல்லை. ஏன் அவரே கூட தன்னை முதல்வர் என்று நம்ப மாட்டேங்கிறார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்து அறிவுப்பு வெளியிடுவதற்கு கூட புரட்சி தலைவி அம்மாவின் ஆணைக்கு இணங்க என உத்தரவு பிறப்பிக்கிறார். ஜெயா நியூஸ்ஸில் எப்போது பார்த்தாலும் மக்களின் முதல்வர் என்று தான் செய்தி வருகிறது. இது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies