அடுத்த வாரம் சீனாவின் குடியரசு தலைவர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . அவர் அந்த சுற்றுப் பயணத்தில் இந்தியாவிற்கு 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளார் . அவர் இந்த அறிவிப்பை மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அறிவிக்க இருக்கிறார் .
டஜிகிஸ்தான் , இலங்கை , மால்தீவ்ஸ் சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் . மோடி ஜப்பானிற்கு சென்று 35 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்தார் . ஆனால் இப்போது சீனா இதை விட மூன்று மடங்கு இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது .
இந்த முதலீட்டை அவர்கள் நிறுவனமயமாக்கல் , இரயில்வே, ரோடுகள் , துறைமுகங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது ஆகிய பல துறைகளில் முதலீடு செய்ய உள்ளனர் .