BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஓ போடு ராணி

ராமராஜன் ஜோடியாக ‘வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமானவர் ராணி. அதன்பிறகு குத்துப்பாட்டு, கிளாமர் பாட்டு, வில்லி வேடம் என எல்லா மொழிகளிலும் 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர், சிலகாலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார்.

தமிழில், ‘காதல் கோட்டை’ படத்தில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு ஓ போடு’ ஆகிய பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பெற்ற ராணி, 2011-ம் ஆண்டு தெலுங்கில் நடித்த ‘நட்சாவுலே’ என்ற படத்திற்காக நந்தி விருது பெற்றார்.

தற்போது அனுஷ்கா நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி, ‘பிரேம்ல பட்டாண்டி’ ‘ஒக லைலா கோசம்’, ‘3 இடியட்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.

ஆனால், இம்முறை ஒற்றைப்பாடலுக்கு நடனமாடும் ஐடியா இல்லையாம். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார். அம்மா, அக்கா, அண்ணி, வில்லி என எதுவானாலும் நடிக்க ரெடி என்று களத்தில் குதிக்கவுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies