‘அரிமா நம்பி’ படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துவரும் படம் ‘சிகரம்
தொடு’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில்
உள்ளது. இந்நிலையில் தன் அடுத்தப் படத்திற்கான வேலையில் இறங்க உள்ளார்
விக்ரம் பிரபு. அவர் நடிக்கும் புதிய படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார்.
‘சைவம்’ படத்திற்குப் பிறகு அமலாபாலை திருமணம் செய்த பிறகு தற்போது தான் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கவுள்ளார் விஜய். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இவர் மலையாள உலகின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாகவுள்ளார். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘ரிங் மாஸ்டர்’ படம் மலையாளத்தில் வெற்றிப் பெற்றது. இவ்வெற்றியே இவரை தமிழுக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவை செய்யவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
‘சைவம்’ படத்திற்குப் பிறகு அமலாபாலை திருமணம் செய்த பிறகு தற்போது தான் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கவுள்ளார் விஜய். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இவர் மலையாள உலகின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாகவுள்ளார். இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘ரிங் மாஸ்டர்’ படம் மலையாளத்தில் வெற்றிப் பெற்றது. இவ்வெற்றியே இவரை தமிழுக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவை செய்யவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.