திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலைகளில்
இரும்புத்தாது எடுக்க தனியார் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதை
எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் 8 பேர் நேற்று திருவண்ணாமலை அடுத்த புனல்காடு பகுதியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் ஆராய்ச்சிக்காக ஒரு காரில் வந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் படிப்பு தொடர்பாக ஆங்காங்கே கிடந்த கற்களை சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மேலும் அதில் உள்ள இரும்புத்தாது குறித்து லேப்–டாப் மூலம் ஆய்வு செய்தனர்.
இதை அறிந்த பொதுமக்கள் ஏற்கனவே இரும்புத்தாது எடுக்க முயற்சி செய்துவரும் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்திருப்பதாக நினைத்து 100–க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்றனர். அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்கள், மாணவர்களை சிறைபிடித்தனர்.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், படிப்பு சம்பந்தமாக ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்க பொதுமக்கள் மறுத்து அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருக்க கார் முன் அமர்ந்துகொண்டனர்.
இதபற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். அதையும் பொதுமக்கள் ஏற்கவில்லை.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் முத்துக்குமாரசாமி சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சென்னையில் இருந்து வந்திருந்தவர்கள் தாங்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என்பதை எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்களை விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கல்லூரி புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் 8 பேர் நேற்று திருவண்ணாமலை அடுத்த புனல்காடு பகுதியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் ஆராய்ச்சிக்காக ஒரு காரில் வந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் படிப்பு தொடர்பாக ஆங்காங்கே கிடந்த கற்களை சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மேலும் அதில் உள்ள இரும்புத்தாது குறித்து லேப்–டாப் மூலம் ஆய்வு செய்தனர்.
இதை அறிந்த பொதுமக்கள் ஏற்கனவே இரும்புத்தாது எடுக்க முயற்சி செய்துவரும் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்திருப்பதாக நினைத்து 100–க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்றனர். அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர்கள், மாணவர்களை சிறைபிடித்தனர்.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், படிப்பு சம்பந்தமாக ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்க பொதுமக்கள் மறுத்து அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருக்க கார் முன் அமர்ந்துகொண்டனர்.
இதபற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். அதையும் பொதுமக்கள் ஏற்கவில்லை.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் முத்துக்குமாரசாமி சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சென்னையில் இருந்து வந்திருந்தவர்கள் தாங்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என்பதை எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர்களை விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.