BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 13 August 2014

தீவிரவாதம் குறித்த மோடியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது: பாகிஸ்தான்

பிரதமர் நரேந்திர மோடி லே மற்றும் லடாக் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நமது ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் முன்பாக உரையாற்றினார்.

அப்போது ''நமக்கு அருகில் இருக்கும் நாடு நம்மிடம் மரபு சார்ந்த போர் புரியும் பலத்தை இழந்துவிட்டது. எனினும், நமது நாட்டில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிட்டு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது.

போரில் ஏற்படும் சேதத்தை விட தீவிரவாதத்தால் நமது ராணுவத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தீவிரவாதம், இன்று உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. எனவே மனித நல பற்றுக்கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து போராட முன்வர வேண்டும்.

இதற்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கவேண்டும் என்பதில் இந்தியா மிக உறுதியாக இருக்கிறது’’ என்றார்.

இந்நிலைியல் மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘‘பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டிவிட்டு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது’’ என்ற மோடியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies