பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு அதன் பின்னர் வாழ்க்கை பொதுவாக சாதராணமாக இருப்பதில்லை . பல தடங்கலுக்கு நடுவே அவர்கள் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் . எனவே சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர் . எவனோ ஒருவன் தன்னுடைய இச்சைகளை கொட்டி தீர்த்து விட்டால் , அதற்கு அந்த பெண் எப்படி பொறுப்பாவாள் ?? ஆனால் இதைப் பலர் மறந்து விட்டு அவர்களை ஏதோ ஒரு வேற்று கிரகவாசிகள் போல் பார்க்கின்றனர் . ஆனால் பீகாரில் , தனது கண்முன்னே கற்பழிக்கப்பட்ட தனது தோழியை முழு மனதுடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது .
இது நடந்து ஒரு வருடம் ஆகி இருந்தாலும் , அந்த நண்பனின் செயலை நாம் நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும் . மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட அவரை கட்டி விட்டு , அவரது தோழியை அவரது கண் முன்னே பாலியல் வன்புணர்வு செய்தார்கள் .
ஆனால் இந்த சம்பவம் நடந்த முடிந்த 4 வது நாளில் அந்த பெண்ணை திருமணம் செய்தார் அந்த நண்பர் . அவர் அந்த பெண்ணை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக கூறினார் .
இது போன்று சில நல்ல உள்ளங்கள் நம் நாட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .