தமிழ்நாட்டில் நேற்று பரவலாக அனேக இடங்களில் மழை பெய்தது. சென்னை,
திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம்
மாவட்டங்களிலும் மாலையில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்ததில் தாழ்வான
பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
எழும்பூர், சென்ட்ரல், ராயபுரம், வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, அடையார், துரைப்பாக்கம், சோழிங்க நல்லூர், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், வடபழனி பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிற் சாலைகளில் தண்ணீர் தேங்க தொடங்கியதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்ததும் தார்சாலை அமைக்காததால், சேற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதேபோல் பல பகுதிகளிலும் ரோடு குண்டும், குழியுமாக இருந்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மழை விட்டு விட்டு தூறலாக பெய்து கொண்டே இருந்ததால் சாலையில் தண்ணீர் ஆங்காங்கே இன்னும் தேங்கி கிடக்கிறது.
இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி அதிகாரி கூறியதாவது:–
கேரளா– கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து 2 நாட்கள் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக நேற்று பரவலாக அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில் மீனம்பாக்கத்தில் 33.9 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 25.5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு:– செம்பரம் பாக்கம் 65 மி.மீ., அம்பத்தூர் 57 மி.மீ., ஆர்.கே.பேட்டை 27 மி.மீ., பூந்தமல்லி 26 மி.மீ., புழல் 25 மி.மீ., கும்மிடிப்பூண்டி 22. மீ.மீ., பள்ளிப்பட்டு 16 மி.மீ., பொன்னேரி 14 மி.மீ., சோழவரம் 15 மி.மீ. மழை பெய்துள்ளது.
மே கூட்டங்கள் திரண்டு வருவதால் இன்று மாலையும், வெப்பசலனம் ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழும்பூர், சென்ட்ரல், ராயபுரம், வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, அடையார், துரைப்பாக்கம், சோழிங்க நல்லூர், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், வடபழனி பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிற் சாலைகளில் தண்ணீர் தேங்க தொடங்கியதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்ததும் தார்சாலை அமைக்காததால், சேற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதேபோல் பல பகுதிகளிலும் ரோடு குண்டும், குழியுமாக இருந்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மழை விட்டு விட்டு தூறலாக பெய்து கொண்டே இருந்ததால் சாலையில் தண்ணீர் ஆங்காங்கே இன்னும் தேங்கி கிடக்கிறது.
இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி அதிகாரி கூறியதாவது:–
கேரளா– கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து 2 நாட்கள் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக நேற்று பரவலாக அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில் மீனம்பாக்கத்தில் 33.9 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 25.5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு:– செம்பரம் பாக்கம் 65 மி.மீ., அம்பத்தூர் 57 மி.மீ., ஆர்.கே.பேட்டை 27 மி.மீ., பூந்தமல்லி 26 மி.மீ., புழல் 25 மி.மீ., கும்மிடிப்பூண்டி 22. மீ.மீ., பள்ளிப்பட்டு 16 மி.மீ., பொன்னேரி 14 மி.மீ., சோழவரம் 15 மி.மீ. மழை பெய்துள்ளது.
மே கூட்டங்கள் திரண்டு வருவதால் இன்று மாலையும், வெப்பசலனம் ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.