BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 9 August 2014

பிறந்த நாளில் நான்கு கிலோ தங்க சட்டை அணிந்த கோடீஸ்வரர்

மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் பங்கஜ் பராக். இவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நான்கு கிலோ எடை கொண்ட தங்க சட்டை அணிந்து மகிழ்ந்தார்.

7 தங்க பட்டன்கள் கொண்ட இந்த சட்டையை பரேலில் உள்ள சாந்தி ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனத்தின் 20 பேர் கொண்ட நகை வடிவமைப்பாளர்கள் குழு, இரண்டு மாதங்களில் 3200 மணி நேரங்கள் செலவழித்து இந்த சட்டையை தைத்துள்ளது. இந்த சட்டையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள தங்கத்தின் தரம் 18 முதல் 22 கேரட் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தில் செய்யப்பட்டிருந்தாலும் இது மடிக்ககூடியதாகவும், அணிந்து கொள்ள ஏதுவாகவும் உள்ளதுடன் உள்புறம்  உடலை கிழிக்காமல் இருப்பதற்காக மெல்லிய துணி வைத்து தைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆடையை அணிந்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைகளில் இடம் பெறுவேன் என்று பங்கஜ் பராக் தெரிவித்தார். மேலும் சிறுவயதில் இருந்தே தங்க நகைகள் அணிவதில் தனக்கு பேரார்வம் இருந்ததாக அவர் தெரிவித்தார். தனது திருமணத்தின் போது மணப்பெண் அணிந்திருந்த நகைகளை விட தான் அதிகமாக அணிந்திருந்ததாகவும் பங்கஜ் மகிழ்ச்சியுடன் கூறினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies