BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 5 August 2014

காதலனுடன் பைக்கில் செல்கையில் விபத்து !! காதலனை கோமாவில் விட்டு விட்டு காதலி தப்பி ஓட்டம் !!



இளம் ஜோடி இரண்டு பேர் பைக்கில் அடையாறு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டது . பையனுக்கு பலத்த அடி ஏற்பட்டது . ஆனால் பெண்ணுக்கு அடி லேசாக இருந்ததால் , அந்த பெண் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆட்டோ பிடித்து தப்பி சென்றுவிட்டார் .

மயிலாப்பூரில் இருந்து திருவாண்மியூர் நோக்கி வந்து கொண்டு இருந்த அந்த ஜோடி , பைக்கில் அதிவேகமாக பயணித்தனர் . அப்போது அடையாறு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது , அதிவேகத்தில் வந்ததால் பைக்கை திருப்ப முடியாமல் சுவற்றில் முட்டினார் . படங்களில் வருவது போல இருவரும் பறந்தனர் . வாலிபருக்கு பயங்கர அடி ஏற்பட்டது . ஆனால் அந்த இளம்பெண் அங்கே நின்று கொண்டு இருந்த ஜிப் மீது விழுந்தார் . இதனால் லேசான காயம் ஏற்பட்டது .

அங்கே இருந்த வாகன ஓட்டிகளும் , பொது மக்களும் இதைக் கண்டு அதிர்ச்சியில் உரைந்தனர் . போலிஸ் அங்கே வந்து அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் அந்த பெண் யாருக்கும் தெரியாமல் நழுவி , ஆட்டோ பிடித்து ஓடி விட்டார் . அந்த வாலிபருக்கு அடி பயங்கரமாக விழுந்ததால் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies