BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

மீண்டும் வில்லனாக நடிக்கிறார் அர்ஜுன்

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த அர்ஜூன் ‘கடல்’ படத்தின் மூலம் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் பிரதிபலித்தார்.

இந்த படத்தையடுத்து இவருக்கு வில்லன் படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால், இவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இவர் இயக்கி, நடித்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினார்.

இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் பிற படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். மறுபடியும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இம்முறை தெலுங்கில் வில்லனாகிறார். அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் இவருக்கு வில்லன் வேடமாம். இப்படத்தை திரி விக்ரம் என்பவர் இயக்குகிறார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies