மைக்ரோசாப்டில் பணியாற்றும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட
உள்ளதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்
இந்த அறிவிப்பால் ஐ.டி. துறை ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில்
மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன சுவிட்சுகள்(ஹப்) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகளை வாங்கும் நிறுவனங்கள் சந்தைக்கு வரும் புதுப்புது தயாரிப்புகளை நோக்கி செல்வதால் சிஸ்கோவின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை குறைந்து வருகின்றது. இதனால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன சுவிட்சுகள்(ஹப்) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகளை வாங்கும் நிறுவனங்கள் சந்தைக்கு வரும் புதுப்புது தயாரிப்புகளை நோக்கி செல்வதால் சிஸ்கோவின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை குறைந்து வருகின்றது. இதனால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.