BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

கறுப்பு பண விவகாரம்: விசாரணை வளையத்தில் 600 பேர்

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் 600 பேர் கொண்ட பட்டியலை மத்திய பொருளாதார புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் பல்வேறு நாடுகள் கடந்த நிதியாண்டில் வழங்கியுள்ளன.

600 பேரின் அடையாளங்கள் குறித்து வங்கிகள் தெரிவித்துள்ள இந்த விவரங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய நிதித்துறையின் கீழ் இயங்கும் துறையான பொருளாதார புலனாய்வுப் பிரிவினர் பல விதமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இத்தகவலை பல்வேறு நாடுகளிலிருந்து பெற்றுள்ளனர்.

வரி ஏய்ப்பு செய்யும் வகையில் இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார புலனாய்வு அதிகாரிகள் இந்த 600 பேரின் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்களை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்கு முன் இத்தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் தான் பெற்றுள்ள நிலையில் முதன் முறையாக பொருளாதார புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இத்தகவலை திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies