தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 1999-ம் ஆண்டில் 'வாலி' படத்தில் ஒரு
சிறிய வேடத்தில் ஜோதிகா அறிமுகமானார். அதன்பின்னர் தனது
நடிப்புத்திறமையினாலும், குடும்ப பாங்கான தோற்றத்தினாலும் ரசிகர்களின்
இதயங்களை இவர் கொள்ளை கொண்டார்.
இவர் நடித்த 'குஷி', 'பேரழகன்', 'சந்திரமுகி', 'மொழி' போன்ற படங்கள் இவருக்கு விருதுகளையும், பெயரையும் அளித்தன. கடந்த 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் இவர் நடிப்புலகிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இவரை மீண்டும் நடிக்கவைக்க பலரும் முயற்சி செய்தபோதும் இவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மலையாளப் படமான 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' வின் தமிழ்த் திரையாக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஏற்று நடித்த பிரதான பெண் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். தற்செயலான ஒரு நிகழ்வாக 15 ஆண்டுகால இடைவேளைக்குப்பின் மஞ்சு வாரியரும் இந்தப் படத்தின் மூலமே தனது திரையுலக மறுபிரவேசத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..
மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழ்ப் படத்தினை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்..பல திரைப்பட வாய்ப்புகள் ஜோதிகாவிற்கு கிடைத்தபோதும் அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் பெண்கள் உரிமை பற்றிய சமூக செய்தியைக் கொண்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று நெருக்கமான வட்டாரம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படக்குழு மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இவர் நடித்த 'குஷி', 'பேரழகன்', 'சந்திரமுகி', 'மொழி' போன்ற படங்கள் இவருக்கு விருதுகளையும், பெயரையும் அளித்தன. கடந்த 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் இவர் நடிப்புலகிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இவரை மீண்டும் நடிக்கவைக்க பலரும் முயற்சி செய்தபோதும் இவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மலையாளப் படமான 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' வின் தமிழ்த் திரையாக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஏற்று நடித்த பிரதான பெண் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். தற்செயலான ஒரு நிகழ்வாக 15 ஆண்டுகால இடைவேளைக்குப்பின் மஞ்சு வாரியரும் இந்தப் படத்தின் மூலமே தனது திரையுலக மறுபிரவேசத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது..
மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழ்ப் படத்தினை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்..பல திரைப்பட வாய்ப்புகள் ஜோதிகாவிற்கு கிடைத்தபோதும் அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் பெண்கள் உரிமை பற்றிய சமூக செய்தியைக் கொண்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று நெருக்கமான வட்டாரம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படக்குழு மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.