BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு : 4 பேர் பலி..!

இத்தாலியின் வெனிஸ் நகரத்திற்கு வடக்கே ரெப்ரோன்டோலோ என்ற பகுதியில் உள்ள பழமையான தொழிற்சாலை ஒன்றில் நேற்று இரவு உள்ளூர் மக்கள் இணைந்த விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன.

ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் அமைந்துள்ள அந்த இடத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஆனால் அந்த சமயத்தில் ஏற்பட்ட கனமழையில் அருவியில் அதிகரித்த நீர்வரத்தானது கீழே இருந்த பகுதிகளை அடித்துச்செல்லத் துவங்கியது.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் கண்ட பலரும் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்த மரங்களில் ஏறியுள்ளனர். ஆனால் சேறும், சகதியுமாகப் பாய்ந்த வெள்ளமானது பலரையும் அடித்துச் சென்றது.

அங்கிருந்த கூடாரங்களும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் கூட இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் நான்கு பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும்பணி நேற்று இரவு முழுவதும் நடந்ததாகக் குறிப்பிடும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புப் பணி வீரர்கள் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களும் நேற்று தொடர்ந்த மழையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies