ஜேர்மனியின் மன்ஹெயிம் ரயில்
நிலையத்துக்கு அருகே வெள்ளி இரவு 250 பேருடன் ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில்
இருந்து சார்புரூகேன் என்ற ஜேர்மனிய நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த
பயணிகள் ரயிலும் ஹங்கேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றும்
நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின. இதில் 35 பேர் படுகாயம்
அடைந்துள்ளனர்.
மேலும் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட நிலையிலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டும் இருந்தன.
இத்தகவலைக் கேள்விப் பட்டு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். தற்போது மீட்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ள போதும் மன்ஹெயிம் ரயில் நிலையம் தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட நிலையிலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டும் இருந்தன.
இத்தகவலைக் கேள்விப் பட்டு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர். தற்போது மீட்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ள போதும் மன்ஹெயிம் ரயில் நிலையம் தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.