பீகார் மாநிலத்தில் காரில் வந்த இரண்டு பேரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மோதிஹரி நகரில் நேற்று இரவு ஒரு கல்லூரியின் அருகில் கார் ஒன்று வேகமாக சென்றது. அப்பொது சாலையோரம் தயாராக காத்திருந்த ஒரு கும்பல், அந்த காரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது. இதனால் நிலைகுலைந்த கார் அருகில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
இந்த தாக்குதலில் காருக்குள் இருந்த மன்டு சர்மா(30), அஷுடோஷ் பாண்டே (26) ஆகியோர் இறந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயங்களுடன் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இரு கோஷ்டியினருக்கிடையே நடந்த சண்டையில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒரு கும்பலின் தலைவனான கமால் சிங்கிற்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மோதிஹரி நகரில் நேற்று இரவு ஒரு கல்லூரியின் அருகில் கார் ஒன்று வேகமாக சென்றது. அப்பொது சாலையோரம் தயாராக காத்திருந்த ஒரு கும்பல், அந்த காரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது. இதனால் நிலைகுலைந்த கார் அருகில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
இந்த தாக்குதலில் காருக்குள் இருந்த மன்டு சர்மா(30), அஷுடோஷ் பாண்டே (26) ஆகியோர் இறந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயங்களுடன் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இரு கோஷ்டியினருக்கிடையே நடந்த சண்டையில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒரு கும்பலின் தலைவனான கமால் சிங்கிற்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.