BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 3 December 2014

அணு ஆயுதங்கள் விவகாரம் : ஐ.நா. சபை தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு



அணு ஆயுதங்கள் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாக்களித்தன. "அணு ஆயுதங்கள் இல்லாத உலகம்' என்ற இலக்கை அடையும் நோக்கில், ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் ஒன்று செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 169 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில், சீனா, பூடான் உள்ளிட்ட 5 நாடுகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. முன்னதாக, அந்த வரைவின் பிரிவுகள் குறித்து தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 9ஆவது பகுதி மீது தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்தப் பகுதியில், "இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள், அணுஆயுதம் இல்லாத நாடு என்ற வகையில் என்.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்; தங்கள் நாட்டில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களையும், சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில், 165 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் எதிராக வாக்களித்தன. பூடான், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies