முஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று காஷ்மீர் பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஸ்ரீநகர் தெருக்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள் அலுவலங்கள் இன்று இயங்கவில்லை காஷ்மீரில் சுதந்திரத்திற்கு ஆதரவான எழுச்சி தொடங்கப்பட்ட பின் 1989ம் ஆண்டில் இருந்து முஹரம் ஊரவலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சிறய அளவிலான ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.