ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்த பிரதமர் ஷின்சோ அபே அழைப்பு விடுத்துள்ளார். பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் வரும் வெள்ளி அன்று நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜப்பான் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் மந்த நிலையை சந்தித்துள்ளது என்றும் சர்ச்சைக்குரிய விற்பனை வரி உயர்வை 18 மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாகவும் அவர் கூறினார்.