BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 29 October 2014

மரக்காணம் கிழக்கு கடற்கரைசாலையில் போலீஸ் குவிப்பு



மாமல்லபுரத்தில் நடைபெறும் அன்புமணி மகள் திருமண நிகழ்வையொட்டி, மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மகள் திருமணம், மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பாமகவினர் மாமல்லபுரத்துக்கு மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்கின்றனர்.

ஏற்கெனவே மாமல்லபுரம் மாநாட்டுக்கு வாகனங்களில் சென்றவர்களுக்கும், மரக்காணம் பகுதி உள்ளூர் மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதுபோன்று பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள், 19 காவல்துறை ஆய்வாளர்கள், 52 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200 போலீஸார் இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் எஸ்.பி. விக்கிரமன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies