உத்தர பிரதேசத்தில் விந்தியாசல் இரயில் நிலையத்தில் விந்தியாச்சல் இண்டர்சிட்டி எஸ்பிரஸ் மதியம் 2.25 மணிக்கு இரயில் நிலையம் வந்தது . அந்த இரயில் அந்த நிலையத்தில் இருக்கும் போது இரயில்வே அதிகாரிகள் இஞ்சினை கழற்றி பின்னே அடுத்த பக்கத்தில் மாட்டுவதற்கு இஞ்சினை கழற்றினார்கள் .
ஆனால் இரயில் பாதை கொஞ்சம் சரிவாக இருந்ததால் இஞ்சின் இல்லாத அந்த 20 கோச்சுகள் பின்நோக்கி செல்ல தொடங்கியது . இஞ்சின் மாட்டுவதற்குள் இரயில் தானாக பின் நோக்கி சென்றதால் இரயில்வே அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர் .
இதனை எதிர்பார்க்காத பயணிகள் பயத்தில் இரயிலின் உள்ளே இருந்து வெளியே குதித்தனர் . பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இரயில் ஒரு கிலோமீட்டர் சென்ற பின்னர் தானாக நின்றது . இது தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணையில் அதிகாரிகள் அழுத்த பிரேக்கை போட மறந்ததால் இரயில் நகர்ந்ததாக தெரிவித்தனர் . இந்த நிகழ்வு தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்பட்டு , அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .
பயணி ஒருவர் தெரிவிக்கையில் , " பிளாட்பாரத்தில் இருந்த சிலர் இரயில் நகருவதைக் கண்ட அதை பிடிப்பதற்காக ஓடினர் " என்றார் .