BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 18 October 2014

இனி இயற்கை பேரிடர்கள் காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பேஸ்புக் மூலம் நான் நலமாக இருக்கிறேன் என தெரிவிக்கலாம் : பேஸ்புக்கின் புதிய வசதி !!

Facebook is launching a new too that will allow users to notify their friends and family that they are safe during the time of natural disasters and emergency condition .



பேஸ்புக் ஒரு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது . இந்த வசதி மூலம் சுனாமி , நிலநடுக்கம் , வெள்ளம் போன்றவை ஏற்படும் போது நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாம் நலமாக இருப்பதை அறிவித்துக் கொள்ளலாம் . இதனை " சேப்டி செக் டுல் " ("Safety Check Tool ") என்று பெயரிட்டுள்ளனர் . ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது பேஸ்புக் பொறியாளர்கள் இது போன்று ஒன்றை உருவாக்கினர் . அந்த வசதியன் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக தான் இது இருக்கிறது .

இந்த வசதியை நாம் ஆக்டிவேட் செய்து விட்டால் ,  பேஸ்புக் நாம் இருக்கும் இடத்தை நமது ப்ரொபைல் மூலம் அறிந்து கொண்டு , நமது இடத்தில் ஏதாவது இயற்கை சீற்றம்  ஏற்பட்டால் , நம்மிடம் " நீங்கள் நலமாக இருக்கீறீர்களா ? என கேட்கும் . இதற்கு நாம் ஆம் என்று பதில் அனுப்பினால் நமது பேஸ்புக் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாம் நலமாக இருக்கும் செய்தி சென்றுவிடும் . இதற்கு இல்லை என்று பதில் அனுப்ப முடியாது . 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies