சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் லேப்டாப் திருடப்பட்டது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: மும்பை சாந்திநிகேதன் நகர் ஏர் இந்தியா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆசாத்கான் (35). இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை காண்பதற்கு வந்தார்.
\
இசை நிகழ்ச்சியின்போது, அங்குள்ள ஒரு அறையில் தனது லேப்டாப்பை வைத்துச் சென்றாராம். இந்நிலையில் சிறிது நேரத்துக்கு பின்னர் ஆசாத்கான்,அந்த அறைக்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது அங்கு வைத்துச் சென்ற லேப்டாப் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.