BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 24 October 2014

கத்தி படத்தின் கதை சுட்டக் கதையா ?? வெளிவந்தது முருகதாஸின் மோசடி .. பேஸ்புக் பதிவரின் கட்டூரை ..


 தீபாவளி அன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி திரைப்படம் வெளிவந்தது . இந்த படத்தின் கதை பலரின் பாராட்டைப் பெற்றது . ஆனால் இப்போது இந்த கதை முருகதாஸின் கதை இல்லை என்றும் இன்னொருவரின் கதை என்றும் பேஸ்புக்கில் பரவலாக செய்திகள் வருகிறது . இது குறித்து இரண்டு பதிவர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர் . அது கீழ் வருமாறு :

பா.ஏகலைவன் ( குமுதம் பத்திரிக்கையில் பணியாற்றியவர் ) :

நாலு இட்லி+ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை
---------------------------------------------------------
சரியாக ஐந்தாண்டுகள் இருக்கும். குமுதத்தில் இருந்த நேரம். பத்திரிகையாளர் தேவா மூலம் அறிமுகமானார் கோபி.அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. திரைப்படக்கதை மற்றும் இயக்கம் பற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கு வந்தாரானால் மணிக்கக்கில் விவாதம் நீளும். அப்படித்தான் தண்ணீருக்கான அரசியல், பன்னாட்டு பெரு முதலாளிகளின் பங்கு என்ற விதத்தையும் விவரித்தார். அவரது பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து. எப்படி என்றால் திரைக்கதையாகவே. முற்போக்கு சிந்தனையோடு இப்படி மக்கள் பிரச்சனையை அனுகும் விதம் சினிமாவில் குறைவு.
இப்படியான சந்திப்பின் போதுதான் ஒரு நாள் எனக்கும் அவருக்குமான ‘எடக்கு முடக்கான’ கதையும் நடந்தது.
“காவிரி தண்ணீர் பிரச்சனை என்றால் தஞ்சை விவசாயி மட்டும்தானே போராடுறான். அங்கிருந்து கொஞ்சம் விவசாயிகள் சென்னை வந்து நம்ப கண்ணு முன்னதான் போராட்டம், ஆர்ப்பாட்டம்னு நடத்துறான். இதை சென்னை வாசிகள் வேடிக்கை பார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்று போகிறானே ஏன். தண்ணீர் கஷ்டம் பற்றி அவனுக்கு தெரியல. தெரியனும்னா என்ன செய்யனும் வீராணம் குழாய உடைக்கனும். பூண்டி நீர்தேக்கத்தை முடக்கனும். அதுவும் விவசாயிகளே செய்யனும். நமக்கு சோறு போடுற விவசாயிகளோட கஷ்டம் அப்பதான் இந்த நகரவாசிகளுக்கு புரியும். ரெண்டு நாள்..இரண்டே இரண்டு நாள், குடிக்கவும் குடிநீர் இல்லாம தவிச்சானா, காவிரி நதிநீர் பிரச்சனையும், தஞ்சை விவசாகிளோட போராட்டத்தையும் புரிஞ்சுக்குவான் இல்ல” என்று கோபி உணர்ச்சிவசப்பட்டு பேச, அது தீவிரவாதமில்லையா என்று நான் கூற, காவல்துறையை ஏவி மக்களை தாக்குவது என்ன புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா என்று அவர் கேட்க கடைசியில் கரடுமுரடா முடிந்தது...
பிறகு ஒரு நாள் வந்தார். பிரபல! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸிடம் இந்த கதையை பற்றி சொன்னதாக கூறினார். இன்னும் சில மாதம் கழித்து சந்தித்தபோது, ஷாட் பை ஷாட்டாக சொல்லி விவாதித்துள்ளேன். படத்தை அவர் தயாரிப்பதாகவும், நான் இயக்குவதாகவும் திட்டம் என்றார். மகிழ்ச்சி, தீவிர உழைப்பிற்கு வெற்றி கிடைக்கட்டும் என்றேன்.
அடுத்த ஓரிரு மாதம் கழித்து சந்தித்த போது ‘தினமும் முருகதாஸிடம் கதை விவாதம் நடப்பதாக சொல்கிறீர். முன்பணம் ஏதாகிலும் கொடுத்தாரா. அல்லது செலவுக்கு ஏதேனும் தந்ததாரா என்றேன். நக்கலாக சிரித்துவிட்டு ‘இந்த ஒன்னறை வருஷத்தில் நாலே நாலு இட்லி. ஒரு டீ அவ்வளவுதான் வாங்கிக்கொடுத்திருக்கிறார். பிறகு ஒரு தடவை நூரு ரூபாய் மட்டும் கொடுத்தார். அதுவும் அன்று இரவு விவாதம் முடிய நடுநிசியானது. போக்குவரத்து வாகனம் இல்லை என்பதால் அந்த 100 ரூபாய் கொடுத்தார் என்றார் வேதனையோடு.
இப்படி ஒன்னறை வருடமாக சிரமப்பட்டு போய் கதைசொல்லி விவாதித்து முடிந்த படம்தான் இன்றைய ‘கத்தி’ திரைப்படம்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸே ‘சொந்தமா யோசிச்சு’ எடுத்த படம்....
போகட்டும். இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் நண்பர் கோபி. இவருடைய கதை ஸ்கிரிப்ட், ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கு சொதப்பலானது. காரணம் வேற.
இப்போது மீண்டும் புதிய வழக்கறிஞரை பிடித்து..மீண்டும் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால் நண்பர் கோபி நீதிமன்றத்தில் கதையை கொடுத்ததை போல தைரியமாக எதிர் தரப்பு கொடுக்கவில்லை. உதவாத காரணங்களை சொன்னது. இப்போது படத்தை பார்த்துவிட்டு கோபி கதறுகிறார். ஒவ்வொரு காட்சியும் நான் சொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனைகூட, பூண்டி நீர் தேக்கத்தை முடக்கனும், வீராணம் குடிநீர் குழாயை மூடனும் என்று சொன்னதைகூட எடுத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமும் அப்படியே இருக்கு என்று புலம்புகிறார்.
பணபலம், அதிகார பலம், செல்வாக்கு எல்லாம்
‘எப்போதும் ஏற்றமாகவே’ இருந்துவிடுமா என்ன?
மீண்டும் வழக்கு தொடர்கிறது. இந்தமுறை தாஸுக்கு
தாவு தீர்ந்துவிடும் என்கிறார்கள். பார்ப்போம்.
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.

Muthu Krishnan :

இன்று தீபாவளி ரிலீஸ் கத்தியை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது அதற்கு ஆதரவாகவும் எதிர்மறையாகவும் ஸ்டேடஸ் போட்டு பலர் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தின் கதையை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது நண்பன் கோபியிடம் கேட்டிருக்கிறேன், அவன் இதற்கு வைத்திருந்த பெயர் ’மூத்த குடி’. ஒன்றரை ஆண்டுகள் அவன் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் அலுவலகத்திற்கு சென்ற வண்ணம் இருந்தான், அவனுக்கு எல்லா உயரிய உபசரிப்புகளும் வழங்கப்பட்டது, இறுதி உபசரிப்பாக அவனது கதை களவாடப்பட்டுவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான், வாய்தா மேல் வாய்தா, அவனது கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தான், வழக்கம் போலவே பணம் பாதாளம் வரை பாய்ந்தது, சாதி படுக்கை அறை வரை பாய்ந்தது, மிச்ச மீதி எல்லாம் பாய வேண்டிய அளவுக்கு பாய்ந்தது. இரு மாதங்கள் முன்பு நக்கீரன், ஜீவி யில் கோபியின் கதை பெரும் செய்தியாக பிரசுரமானது, ஆனால் இன்று மொத்த உலகமும் வேறு ஏதேதோ கதைத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது, ஒன்று மட்டும் நிச்சயம் இது போல் ஓராயிரம் கோபிக்கள் சென்னையின் ஏதோ ஒரு மொட்டை மாடியில் இரவு உணவுக்கு வழி இல்லாமல் உறக்கமில்லாமல் புரண்டுகொண்டிருப்பார்கள், அல்லது தங்களின் அடுத்த கதையை பற்றி சிந்தித்துக் கொண்டு நட்சத்திரங்களையும் வான வேடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருப்ப்பார்கள். உலகமே வழுத்தவர்கள் பக்கம் நின்றாலும் கூட எனது மனம் இவர்களின் பக்கமே நிற்க முயலுகிறது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies