BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 23 October 2014

சியோமி மொபைல்களை பயன்படுத்தாதீர்கள் - எச்சரிக்கிறது இந்திய விமானப் படை !!



சியோமி மொபைல் நிறுவனம் இந்தியாவில் தனது மொபைல்களை அறிமுகப்படுத்தி இந்திய மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றது . சீன தயாரிப்பான இந்த மொபைலின் தனி நபர் பாதுகாப்பு குறித்தும் , மற்ற பாதுகாப்புகள் குறித்தும் கேள்வி எழுந்தது . இப்போது இந்திய விமானப்படை அதிகாரிகள் அவர்களது அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை இந்த மொபைல்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது .

விமானப்படையிடம் இருந்து வெளிவந்த அறிவிப்பின்படி இந்திய கண்ணி தொடர்பு மையத்தின் தகவல்கள் படி இந்த சியோமி மொபைல்கள் சில தகவல்களை சீனாவுக்கு அனுப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது . ஆனால் கணிணி தொடர்பு மையம் எதனடிப்படையில் இதனை தெரிவித்து இருக்கிறது என தெரியவில்லை .

சியோமி நிறுவனம் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் , ஆனால் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியில் ஒரு பகுதியாக சில தகவல்கள் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றது . இதேப் போன்று தான் சியோமி நிறுவனம் தைவான் நாட்டிலும் தகவல்களை அனுப்பவதாக பிரச்சனை வந்துள்ளது . 

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies