BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 6 October 2014

10 நாட்களாக ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா ?? - இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது

கடந்த வாரத்துக்கு முந்தைய சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாயிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்டார் அவர்.  அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனால் அக்டோபர் 7 ஆம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது ,

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மாலனி வாதாட உள்ளார். 10 நாட்களா ஜெயிலில் இருந்து வரும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று பார்ப்போம்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies