இளம் வயது சமூக ஆர்லரான மலாலா யுசப்சாய் 2012 ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார் . அவரை தாக்கிய 10 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .
மலாலா தாலிபான் ராணுவத்தின் கீழ் தன்னுடைய வாழ்க்கைப் பற்றி பிபிசிக்கு ஒரு டைரி எழுதினார் . இதன் மூலம் பொது மக்கள் கவனத்திற்கு வந்தார் மலாலா . இவர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார் . உலகை உலுக்கிய இந்த தாக்குதலில் இருந்து மெதுவாக குணமாகி வந்தார் . இதன் பின்னர் இவர் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட துவங்கினார் .
இதனால் இவர் உலக அமைதி நோபல் பரிசிற்காக நாமினேட் செய்யப்பட்டார் .