BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 11 September 2014

பர்வேஸ் முஷாரஃப் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவர் தேசத்துரோகக் குற்றம் இழைத்திருப்பதாக அந்நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்.ஐ.ஏ) நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஃபைஸல் அரப் தலைமையிலான அமர்விடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரி காலித் குரேஷி கூறுகையில், ""பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை தாற்காலிகமாக முடக்கி வைப்பதற்கான உத்தரவை, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி முஷாரஃப் வெளியிட்டுள்ளார்.

எனவே, அவர் மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது'' என்று கூறினார்.
பாகிஸ்தானில் ஏற்கெனவே பல வழக்குகளைச் சந்தித்து வரும் முஷாரஃபுக்கு இது பலத்த பின்னடைவு எனக் கூறப்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies