BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 11 September 2014

விமான நிலையத்தில் போலீஸார் விட்டுச் சென்ற வெடிபொருட்கள், ஒப்படைத்த பெண் பயணி


விமான நிலையத்தில் போலீஸார் விட்டுச் சென்ற வெடிபொருளை பெண் பயணி ஒருவர் போலீஸாரிடம் ஒப்படைத்த வினோத சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.

அந்நாட்டின் சிட்னி விமான நிலையத்துக்கு வந்த பயணியின் சூட்கேஸ் சேதமடைந்ததால், அதற்குப் பதிலாக தங்களிடமிருந்த, உரிமை கோரப்படாத பெட்டி ஒன்றை விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் அளித்தனர். வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த அந்தப் பயணி, அதில் பிளாஸ்டிக் வெடிபொருள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்தப் பெட்டியை ஒப்படைத்தார்.

பெட்டியில் வெடிபொருள் இருந்ததை அறிந்த போலீஸார், உடனடியாக காவல் நிலையக் கட்டடத்தலிருந்த அனைவரையும் வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த வெடிபொருள் மத்திய காவல்துறைக்குச் சொந்தமானது எனவும், கடந்த மாதம் நடைபெற்ற மோப்ப நாய் பயிற்சியின்போது, பயிற்சியாளர் அதனை விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இறுதியில், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட மத்திய காவல்துறை, "வெடிபொருளை விட்டுச் சென்ற பயிற்சியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெறும்' என்று கூறியுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies