BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 15 August 2014

சுதந்திர தினத்தின் போது தியாகிகளின் ஓய்வுதியத்தை உயர்த்திய தமிழக முதல்வர் !!



இந்திய நாட்டின் 68வது சுதந்திர தினத்தையோட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி , சுதந்திர தின உரையாற்றினார் . அந்த உரையில் தியாகிகளின் ஓய்வுதியத்தை உயர்த்தும் அறிவிப்பு உட்ப்பட சில திட்டங்களை அறிவித்தார் . முதல்வர் அறிவித்த திட்டங்கள் கீழ் வருமாறு :

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வுதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் . அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் 4,500 இல் இருந்து 5,000 ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் 1,955 பேர் பயனடைவர் .

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறப்பு பணியாற்றி நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊதியமான 2,000 ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும் . இதன் மூலம் 195 பேர் பயனடைவர் .

தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களில் இனிமேல் கலவை சாதத்துடன் மசால் சேர்ந்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார் .

மேலும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் , டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies