BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 8 August 2014

ஈராக்கில் போராளிகளின் பீரங்கி மீது அமெரிக்கா விமான தாக்குதல்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எல்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த ஒரு லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர். அவர்கள் பிடித்து வைத்துள்ள யாஷிடி இன மக்களுக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை போடுவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார்.

மேலும், குர்தீஷ் மாகாணத்தின் தலைநகர் எர்பில் நோக்கி போராளிகள் முன்னேறும் பட்சத்தில் அவர்கள் மீது குண்டு வீசி தாக்கவும் அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், எர்பில் நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க படையினரின் முகாம் அருகில் போராளிகள் பீரங்கி தாக்குதல் நடத்தினர். எர்பில் நகரை பாதுகாத்து வரும் குர்திஷ் படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து அமெரிக்க படைகள் உஷார்படுத்தப்பட்டன. போராளிகளின் பீரங்கி வண்டி மீது அமெரிக்கா இரண்டு போர் விமானங்கள் மூலம் 225 கிலோ எடைகொண்ட லேசர் வழிகாட்டி குண்டுகள் வீசப்பட்டன.

எங்கள் படைகளை அச்சுறுத்தினால் ஐ.எஸ்.ஐ.எல். போராளிகள் மீது தாக்குதல் தொடரும் என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் எச்சரித்தார்.

ஈராக்கில் உள்ள தனது படைகளை திரும்ப பெற்றபிறகு அமெரிக்கா தற்போது நடத்திய இந்த தாக்குதல் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்குதலாக கருதப்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies