BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 7 August 2014

பேஸ்புக்கில் ஆசிரியர் போட்டோவுக்கு கமென்ட் அடித்து விட்டு விஷம் குடித்த இன்ஜினியரிங் மாணவர்




காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இங்கு மதுரை வத்தலகுண்டை சேர்ந்த நாகூர் மொய்தீன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் காரைக்கால் பூவத்தை சேர்ந்த கார்த்திகா, பேராசிரியையாக உள்ளார். அந்த ஆசிரியர் பேஸ்புக்கில் தனது  போட்டோவை அப்லோட் செய்து உள்ளார். அதற்கு நாகூரி மொய்தீன் கமென்ட் செய்து உள்ளார். இதனால் கோபமான அந்த ஆசிரியர் தனது கணவருடன் சென்று போலீஸில் புகார் செய்து உள்ளார்.

போலீஸார் அந்த மாணவனை தாக்கி அவனை அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க கூறியுள்ளார்கள். இதனால் அந்த மாணவன் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். அந்த மாணவனை தாக்கிய போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கூடி, துணை கலெக்டர் மாணிக்க தீபனிடம் மனு கொடுத்தனர். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies