முன்னனி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்திற்கும் , ஆப்பிள் நிறுவனத்திற்கும் அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டே இருக்கும் . இருவரும் தொழில்நுட்ப உலகில் எதிரிகளாகவே இருந்து கொண்டு இருக்கின்றனர் . ஆனால் கூகுள் நிறுவனத்திற்கு இப்போது ஆப்பிள் நிறுவனத்தால் தலைவலி இல்லை , சுறா மீன்களினால் தான் அவர்களுக்கு தலைவலியாம் .
கூகுள் தன்னுடைய கேபில் வயர்கள் அனைத்தையும் கடல் வழியாக கொண்டு செல்கிறது . இந்த வயர்களில் இருந்து ஏற்படும் காந்தப் புலம் , ஆபத்தான மீன்கள் ஏற்படுத்துவதை ஒத்து இருப்பதால் சுறா மீன்கள் தங்களுக்கு உணவு கிடைத்துவிட்டது என எண்ணி இந்த வயர்களை உண்ணுகின்றனர் .
எனவே இந்த சுறாக்களிடம் இருந்து கேபிள்களை காப்பாற்ற கெவ்லான் என்னும் அதிக வலிமை உடைய கவச செயற்கை இழையில் இருந்து இந்த கேபிள்களுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .