தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு கட்டுரையை
வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து, தமிழ்த் திரை அமைப்புகள் சார்பில்
இலங்கை துணைத் தூதரகம் முன் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தி வரும் தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் அவதூறாகச் சித்திரித்துள்ளது.
எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு, தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு என்ற போர்வைக்குள் இலங்கை அரசு தன்னை மறைந்துக்கொள்ள விரும்புகிறது.
இப்போது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக முதல்வர் தொடர்ந்து போராடும் போதெல்லாம் அதைக் குற்றம்சாட்டுவதையும், இழிவுபடுத்துவதையும் இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழர்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், தமிழக முதல்வரையும் கொச்சைப்படுத்தி வரும் இலங்கை அரசின் ஒட்டுவாலாக இருக்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழ்நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாகும்.
எனவே இந்தத் துணைத் தூதரகத்தை மூடக்கோரி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரையமைப்புகளின் உறுப்பினர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தி வரும் தமிழக முதல்வரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் அவதூறாகச் சித்திரித்துள்ளது.
எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு, தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பு என்ற போர்வைக்குள் இலங்கை அரசு தன்னை மறைந்துக்கொள்ள விரும்புகிறது.
இப்போது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக முதல்வர் தொடர்ந்து போராடும் போதெல்லாம் அதைக் குற்றம்சாட்டுவதையும், இழிவுபடுத்துவதையும் இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழர்களின் உணர்வுகளைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், தமிழக முதல்வரையும் கொச்சைப்படுத்தி வரும் இலங்கை அரசின் ஒட்டுவாலாக இருக்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழ்நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாகும்.
எனவே இந்தத் துணைத் தூதரகத்தை மூடக்கோரி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரையமைப்புகளின் உறுப்பினர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.