மோடி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி . முன்னர் இவர் கல்வி நிலை குறித்து பலர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர் . ஆனால் அவர்களின் கேள்வி குறித்து நடந்த இந்தியா டுடேயின் கூட்டத்தில் பதில் அளித்துள்ளார் .
அவர் கூறுகையில் , " என்னை பலர் படிக்காதவர் என்று குறை கூறுகின்றனர் . ஆனால் எனக்கும் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்ட இருக்கிறது . என்னால் அதை வெளிக் கொண்டு வர முடியும் , அதை மட்டும் இல்லாமல் , யேல் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்கள் என் தலைமைப் பண்பை எப்படி பாராட்டினார்கள் என்றும் கொண்டு வர முடியும் . ஆனால் அது தேவையில்லை . இது போன்ற பிரச்சனைகளைக் கிளப்பி என் கவனத்தைச் சிதறடிக்கின்றனர் " என்றார்
ஆனால் அவர் அந்த பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை . இது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில் , " இந்தியா சார்பாக 11 அமைச்சர்கள் யேல் பல்கலைக்கழகத்தில் நடந்த தலைமைப் பண்புக்காக நடந்த 6 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் " என்று தெரிவித்துள்ளார் .