காமன்வெல்த் ஸ்குவாஷ் இரட்டையர்
பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஜெயலலிதா வாழ்த்து
தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைப்பெற்று வந்த
காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் முடிந்தன.
இந்த 20 வது காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளும் தங்கப்பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடைப்பெற்ற ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா, ஜோஷ்னா இருவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளளார்.
மேலும் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காமன் வெல்த் போட்டிகளில் தமிழகத்துக்கு மூன்று தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இந்த 20 வது காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளும் தங்கப்பதக்கம் வென்று சாதனை செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடைப்பெற்ற ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா, ஜோஷ்னா இருவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளளார்.
மேலும் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காமன் வெல்த் போட்டிகளில் தமிழகத்துக்கு மூன்று தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.