பீஜிங் : சீனாவின் யுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியான்மரின்
எல்லைப்பகுதியில் இருக்கும் யுனான் மாகாணத்திலுள்ள லூடியான் நகரத்திலே
இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்துயர சம்பவத்தில் 150 பேர் வரை பலியாகி
இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி
இருக்கும் இந்நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் பள்ளிக்கூட கட்டிடங்கள்
இடிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீன அரசு தேவையான
நடவடிக்கைகளை துரித வேகத்தில் செய்து வருகிறது.