BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 20 November 2024

"திமுக அரசின் நில எடுப்புப் பணிகளால் தமிழகமே போராட்ட களமாகியுள்ளது" - ஆர்.பி. உதயகுமார் சொல்வதென்ன?

திமுக அரசின் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலைப் பணிகள் என்றாலும், புதிய கட்டடங்கள் என்றாலும் வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது தனியார் நிலங்களை அரசு சரியாகக் கையகப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் போராட்டம்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2500 ஏக்கருக்கும் அதிகமாக நிலத்தை மக்களின் ஒத்துழைப்போடு கையகப்படுத்தி வழங்கினார். மக்களுக்கான திட்டங்களை அறிவித்த அடுத்த நாளே, அதற்கான நிலத்தை ஒப்படைக்கிற பணியை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்வதிலும், 6 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலும், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு செய்தார். ஆனால், சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திவ்யா தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலம் வழங்கிய பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் கேட்டுப் போராடி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்த நிலங்களைக் கையகப்படுத்தாமல் அண்டர் பாஸ் மூலம் விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் முன்மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் அனுமதியைப் பெற்று மாநில அரசு மூலம் அரசாணை வெளியிட்டார். எடப்பாடியார் கொண்டு வந்த திட்டம் என்பதால், தி.மு.க அரசு அதை மறுத்துக் கைவிடப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழிச்சாலை போன்ற பல திட்டங்களுக்கு நில எடுப்பு பணியின்போது அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களைத் தூண்டிவிட்டார்கள். அதற்கு உரிய விளக்கத்தை மக்களிடத்தில் சொல்லி 11 மருத்துவக் கல்லூரிகள், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம், 6 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அமைத்துக் கொடுத்தார்

ஆர்.பி. உதயகுமார்

தற்போது தி.மு.க அரசில் நில எடுப்புப் பணியால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. மதுரை முல்லை நகர்ப் பகுதியில் நிலம் தொடர்பாக மக்கள் போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.

தி.மு.க அரசு மக்களை இன்று வீதியில் நிறுத்தி இருக்கிறது. இதற்கு உரிய பதிலை, உரிய பாடத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஸ்டாலினுக்குப் புகட்டுவார்கள். மக்கள், தங்களுக்கு ஆதரவாக, ஒரே நம்பிக்கையாக, எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என நினைக்கிறார்கள். மக்களின் நம்பிக்கை நிறைவேறுகிற காலம் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies