BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 22 June 2015

சோழிங்கநல்லூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடக் கோரி 26-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

சோழிங்கநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தி வரும் 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தென் மண்டல திமுக செயலாளர் மா.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், "அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக தமிழகத்தில் இதுவரை எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்யாமல், கண்டும் காணாமல் இருந்து வருவதை அனைவரும் நன்கறிவர்.
குறிப்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு சென்னை மாநகராட்சியோடு இணைந்த எந்த பகுதியிலும் மக்களின் அன்றாட தேவைகள் கூட எதையும் நிறைவேற்றாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி வருகின்ற 26.6.2015-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 11 வரை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் கலைஞர் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எனது தலைமையில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும், செயல்வீரர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று தத்தமது கண்டனத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies