BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday 10 December 2014

மத்திய அரசு விருது எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம்! - ரஜினி

கோவா: மத்திய அரசு தரும் விருது எனக்கு பெரிய கவுரவம். மகிழ்ச்சியாக உள்ளது என்று ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகருக்கான விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.



இந்த விழாவில் பங்கேற்க தன் மனைவியுடன் கோவா வந்தார் ரஜினிகாந்த். அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு அளிக்கும் இந்த விருது எனக்கு பெரிய கவுரவம், பெருமை," என்றார். மீண்டும் அமிதாப் பச்சனுடன் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, "அதை அமித்ஜியிடம்தான் கேட்க வேண்டும். அவருக்கு ஓகேயென்றால் நடிப்போம்," என்றார். லிங்கா வெளியீடு பற்றிக் கேட்டபோது, "டிசம்பர் 12-ம் தேதி படம் வெளியாகும்" என்றார் ரஜினி.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies