BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 15 December 2014

கோலி, தவன், வார்னருக்கு அபராதம்: ஐசிசி நடவடிக்கை


      முதல் டெஸ்ட் போட்டியில் வாக்குவாதங்களில் ஈடுபட்ட கோலி, தவன், வார்னர் ஆகிய மூவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
அடிலெய்டில் நடந்த இந்தியா– ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளன்று வருண் ஆரோன் பந்துவீச்சில் டேவிட் வார்னர் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது ஆரோன் ஆக்ரோஷமாக துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
      ஆனால் அந்தப் பந்து நோ-பால் ஆனதால் வார்னர் அவுட் ஆகவில்லை. இதைத் தொடர்ந்து ஆரோனைப் பார்த்து கமான் கமான் என்று வெறுப்பேற்றினார் வார்னர். இதனால் தவனுக்கும் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோலி தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினார்.
      பிறகு ஸ்மித்தின் எல்பிடபிள்யூ-வுக்காக நடுவரிடம் அவுட் கேட்டார் ரோஹித் சர்மா. அப்போது தேவையில்லாமல் ரோஹித் சர்மாவைப் பார்த்து ஸ்மித் ஏதோ கூற, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கோலியும் ஸ்மித்திடம் இது தொடர்பாக பேசினார். 
      இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து கோலி, தவன், வார்னர் ஆகிய மூவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. வார்னர் ஆட்டத் தொகையிலிருந்து 15 சதவீதமும் கோலி, தவன் ஆகிய இருவரும் தலா 30 சதவீதமும் அபராதம் செலுத்தவேண்டும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies