BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 4 November 2014

எல்லைப் பிரச்னையைத் தீர்க்க அவகாசம் தேவை: சீனத் தூதர்

"இந்திய-சீன எல்லைப் பிரச்னையைத் தீர்க்க போதிய அவகாசம் தேவை' என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லீ யுசெங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ரூ. 1.23 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீனாவில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தியாவுக்கு 24 மணி நேரம் மின்சாரமும் கிடைக்க வாய்ப்புள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பாதையைத் திறக்க அண்மையில் சீனா ஒப்புதல் அளித்திருப்பதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் இப்பாதை செயல்படத் தொடங்கும் என்று லீ யுசெங் தெரிவித்தார்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies