BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 4 November 2014

ஏ.டி.எம். மையத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள்


சேலம் மாவட்டம், ஆத்தூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது கள்ள ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர் கிருஷ்ணன் என்பவர் பணம் எடுத்தார். அதில் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ள நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல முருகேசன் என்பவர் பணம் எடுத்தபோதும் ரூ. 3 ஆயிரம் மதிப்பில் கள்ள நோட்டுகள் வந்தது. இதைத் தொடர்ந்து, 5 பேர் பணம் எடுத்தனர். அவர்களுக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. இதனால், அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை அளிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies