BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 30 November 2014

தென் மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்


தமிழகம், புதுவை உள்பட ஆறு மாநிலங்களில் 1.5 லட்சம் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.2) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வங்கிகளின் ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 12-ஆம் தேதி நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் கோரிக்கைகளை இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகள் ஏற்காத நிலையில், மாநிலங்கள் வாரியாக டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம், புதுவை, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies