நாட்டின் பாதுகாப்புக்கு உளவுத் துறை வலுவாக இருப்பது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற 49-ஆவது காவல் துறை தலைமை இயக்குநர்கள் (டி.ஜி.பி.க்கள்) மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தினார்.